விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.