பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. இந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மேற்கூரைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனங்கள் பழுதடையும் நிலை உள்ளதால் வாகனத்தின் உரிமையாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.