சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் சாலையில் செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்வதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.