தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் உள்ளது. இதன் அருகே வெற்றி விநாயகர் நகர், வெற்றி நகர்,ரோஸ் நகர்,அம்பிகா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கதண்டுகள், பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.மேலும், அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் விஷப்பூச்சிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.