தஞ்சை தமிழ் பல்கலைக்கழக குடியிருப்பு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதில் சில காளை மாடுகள் அந்த வழியாக செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. இதன்காரணமாக குடியிருப்பவாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை பிடித்துசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.