மதுரை மாநகராட்சி 30-வது வார்டு பி.டி. காலனி சாலை, பி.டி காலனி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும், முதியவர்களை துரத்துகிறது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே பயணிக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?