தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-10 11:54 GMT

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளை தெருநாய்கள் கடிக்க விரட்டுவதால் இப்பகுதியில் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்