நம்பியூர் அருகே அஞ்சானூர், வேமாண்டம்பாளையம், லாகம்பாளையம் கிராம பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அங்குள்ள ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?