மதுரை நகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் அச்சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றது. மேலும் சாலையில் விளையாடும் சிறுவர் சிறுமிகளை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.