விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் இருந்து செங்கமலநாச்சியார் புரம் செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதோடு கீழே விழுந்து விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?