கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் முத்தனூரில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் முற்றிலும் சிதிலமடைந்து சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் வளாகத்தை சுற்றி ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல காட்சியளிக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் கழிவறை இல்லாததால் பெண்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய சுகாதார வளாகத்தை இடித்துவிட்டு புதிய சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.