சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு வரும் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.