நெய்வேலி ஆர்ச்கேட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.