நோயாளிகள் அவதி

Update: 2025-07-20 13:13 GMT

பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் பைகளை எடுத்துச்செல்வதுடன், அவர்கள் நோயாளிகளுக்கு வாங்கி வரும் உணவுப் பொருட்களையும் எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்