தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-07-06 10:19 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், மற்றும் முதியோர்கள் சரியான தூக்கமின்றி மிகவும் அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதயில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்