திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலை செட்டிகுட்டைமேடு ஊரிலிருந்து தெற்கு பகுதியில் கிளாப்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. அந்த ஊருக்கு செல்ல நெடுஞ்சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெயர் பலகையில் கிளாப்பாளையம் என்பதற்கு பதிலாக கிழபாளையம் என்று தமிழில் தவறாக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிதாக அந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரியாக வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜன், கிளாப்பாளையம்.