தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே செங்குளம் கிராமத்தில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. எனவே பலத்த காற்றில் இந்த மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.