கும்பகோணம் தேவனாஞ்சேரி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இருக்கும் இடத்தை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த் தேக்கதொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.