ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகருப்பன் நகர், முதுனால் ரோடு ஆகிய பகுதிகளில் சில வாரங்களாகவே தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின் விளக்குகளை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.