மதுரை பழங்காநத்தம்-திருநகர் வரை உள்ள திருமங்கலம் செல்லும் சாலையில் சிலர் இரு சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த முக்கிய சாலையில் இவ்வாறு செல்வதால் பிற வாகன ஓட்டிகளும் சாலையை கடக்க நிற்கும் பொதுமக்களும் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.