காரைக்கால்- சென்னை செல்லும் காரைக்கால் விரைவு வண்டி (கம்பன்) சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த ரெயிலானது சிதம்பரத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.