சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சான்றிதழ்கள் வாங்க சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கிராம நிர்வாக அலுவலகம் தினசரி திறந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.