ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். மேலும் இந்த தெருநாய்களால் பொதுமக்கள் அவ்வப்போது விபத்தையும் சந்திக்கின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.