சிவகங்கை கல்லூரி வீதி, மேலரத வீதி, ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் இளைஞர்கள் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்கும் பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகுந்த அச்சமடைவதோடு சிலர் விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே மேற்கண்ட அப்பகுதிகளில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.