சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்துவதுடன் தெருவில் விளையாடும் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வெளியே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.