சிவகங்கை மாவட்டம் பழையனூரில் இருந்து சம்பட்டிமடை கிராமத்திற்கு செல்ல நீர்வளத்துறைக்கு சொந்தமான கண்மாய் கரை வழியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும்,சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?