ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2025-06-22 10:56 GMT

திருவையாறு முதல் திருக்காட்டுப்பள்ளி இடையிலான பகுதியில நெடுஞ்சாலையையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த இடைப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, விவசாயிகளுக்கு பாம்பு கடி ஏற்பட்டாலோ அவசர சிகிச்சைக்கு திருவையாறு அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து திருவையாறு-திருகாட்டுப்பள்ளிக்கு இடைப்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்