‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2025-06-15 18:16 GMT

கவுந்தப்பாடி புதூரில் உள்ள ஸ்ரீநகரில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்துக்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. எனவே குழாய் அமைத்து மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது மேல்நிலை குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி