வெட்டுக்காடு கணவாய் மேட்டில் பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவ்வழியே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு தின்பண்டங்களை போட்டு விட்டு செல்கின்றனர். இந்த தின்பண்டங்களை குரங்குகள் சாலையின் குறுக்கே நின்று போட்டி போட்டுக்கொண்டு தின்பதற்காக எடுத்துச் செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் குரங்குகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் காணப்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை போடுவதை தவிர்க்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-ரமேஷ், வெட்டுக்காடு.