சேலம் பச்சப்பட்டி 40-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆதிதிராவிடர் மயானம் உள்ளது. இது முறையாக பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதராக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் மயானம் முழுவதும் ஏரிபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்தை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்றி கான்கிரீட், குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.கே.பிரகாஷ், பச்சப்பட்டி.