ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் மையனூர் ஊராட்சி எகால் ரோடு பஸ் நிறுத்தம் அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் சமூக விரோதிகள் அந்த கட்டிடத்தின் மேற்கூரையை திருடிச் சென்று விட்டனர். எனவே சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.