தியாகதுருகத்தில் இருந்து சிறுநாகலூர் செல்லும் சாலையில் வனப்பகுதியில் சுமார் 1 கி.மீ தூரம் சாலையோரம் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும் சாலையோரம் பள்ளமாகவும் உள்ளது. இதனால் அவ்வழியாக கனரக வாகனங்கள் வரும் போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் சாலையில் ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே முட்புதர்களை அகற்றவும், சாலை பள்ளத்தை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.