கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்குமுனை சந்திப்பில் அதிகளவில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.