புதுப்பேட்டை பகுதியில் பொது இடங்களில் இருந்த கொடிக்கம்பங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. ஆனால் சிறுவத்தூர், சிறுகிராமம், திருவாமூர், ஒறையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே அந்த கொடிக்கம்பங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.