பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ராஜிவ்காந்தி கேந்திர சேவா மைய கட்டிடம் கட்டப்பட்டன. இந்த கட்டிடத்தை செங்குணம் அண்ணா நகர் பகுதி ஏழை பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று சமுதாயகூடம் என்ற பெயரில் திருமணம், காரியம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சியில் உணவு சாப்பிடுவதற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது கிராமிய பொது சேவை மையமாகவும், மகளிர் சுய உதவிக் குழு பயன்பாட்டிற்காகவும் கொண்டு வரபட்டுள்ளது. செங்குணம் கிராமத்தில் சமுதாய கூடம் என தனியாக அரசு கட்டிடம் ஏதும் இல்லை. இதனால் செங்குணம் அண்ணா நகர் பகுதி ஏழை மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே செங்குணம் ஊராட்சியின் செங்குணம் அண்ணா நகர் பகுதியில் சமுதாய கூடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.