பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி மணியாரன் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து கொசுத்தொல்லை ஏற்பட்டுள்ளது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், கொசுக்களை ஒழிக்க கொசுமருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.