திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் உள்ள சர்.ராமசாமி பள்ளியின் நுழைவு வாயில் எதிரே சோழம்பேடு மெயின் ரோடு உள்ளது. இந்த பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ-மாணவிகள் அச்சமடைகிறார்கள். இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.