சிவகங்கை நகர் பகுதியில் இயங்கி வரும் இறைச்சிக்கடைகளில் மிஞ்சும் இறைச்சி கழிவுகளை சிலர் சாலையில் ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலை பகுதிகளில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா ?