சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. நாய்கள் துரத்தி சென்று கடிப்பதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.