கதவு இல்லாத சுற்றுச்சுவர்

Update: 2025-06-08 14:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கதவு இல்லாததால் ஆடு, மாடுகள், நாய்கள், இரவு நேரங்களில் தங்கி இடத்தை அசுத்தம் செய்கிறது. மேலும், மது பிரியர்கள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே விட்டு செல்கிறார்கள். இதனால் பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு பள்ளி வளாகம் அசுத்தமாக கிடக்கிறது. எனவே, பள்ளி வளாகத்திற்கு கதவு அமைக்க வேண்டும் என மாணவ-மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்