திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் ஏதேனும் நிகழ்ச்சி நடத்துவதற்கு கூட இடவசதி இல்லாமல் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சமுதாய நலகூடத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.