மேலச்சின்னையாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எல்லையில் மேலச்சின்னையாபுரம் என்ற ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூரில் இருந்து வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஊர் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.