சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்கள் அப்பகுதியல் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?