கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-06-08 14:07 GMT

விருதுநகரை அடுத்த ஆமத்தூர் பகுதியில் உள்ள கண்மாயில் ஆகாயத்தாமரை படர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் நீர் நிலை முற்றிலுமாக மாசடைகிறது. மேலும் கண்மாயில் மண் அதிக அளவில் உள்ளதால் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் நிரம்பி வெளியேறி விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் குவிந்து கிடக்கும் மண்ணையும் முற்றிலுமாக அகற்றி கண்மாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்