தஞ்சை மாவட்டம் ஆலக்குடி கிராமத்தில் கீழத்தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.