திருப்பூரில் வீட்டை விட்டு வெளியே வந்து பின்னர் வீடு பே ாய் சேரும்போது நாயிடம் கடிபடாமல் சென்றால் அவர்கள் அதிர்ஷ்டசாலி. அந்த அளவுக்கு திருப்பூரில் காணும் இடமெல்லாம் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் தினமும் ஏராளமான தொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள். எனவே நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.