ராமநாதபுரம் மாவட்டம் குதக்கோட்டையில் இருந்து திருப்புல்லாணி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து படர்ந்து உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்படுகின்றன. எனவே சாலையை ஆக்கிரமிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.