சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர், ஒன்றியம் புழுதிப்பட்டி, செட்டிக்குறிச்சி, கே.புதுப்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் அச்சத்துடனே சாலையில் பயணிக்கின்றனர். மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் படுத்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.