ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரியவிடுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.