சிறுபாக்கம் கிராமத்தில் குறுவட்ட நிலஅளவர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் இந்த கட்டிட வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதை தவிர்க்க பூட்டிக்கிடக்கும் நில அளவர் அலுவலக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.